சிம்பு பட ரிலீசின்போது ஆப்புவைக்க தயாராக காத்திருக்கும் கார்த்தி..!


பீப் பாடல் விவகாரத்துக்கு பின்னர், சிம்பு வீட்டை விட்டு வெளிவருகிறாரோ இல்லையோ அவர் நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தை வெளியே கொண்டு வருவதற்கான வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. அதிலும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியுள்ளதால் படம் பிரச்சனை இன்றி ரிலீஸ் ஆகிவிடும் என தைரியமாக இருக்கிறது டி.ஆர் தரப்பு..

ஆனால் பிரச்சனை இப்போது வேறு ரூபத்தில் வரும்போல தெரிகிறது. எப்படி என்றால் மார்ச்சில் சிம்பு படம் ரிலீஸ் செய்யப்படலாம் என முடிவு செய்யப்பட்டிருக்கும் அதேநாளில் தான் கார்த்தி, நாகார்ஜுனா நடித்துள்ள ‘தோழா’ படத்தையும் வெளியிட முடிவுசெய்துள்ளார்களாம். நடிகர்சங்க தேர்தலில் சிம்பு ஆடிய ஆட்டத்திற்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்ட கார்த்தி, இப்போது சிம்புவுக்கான ஆப்புடன் தயாராக நிற்கிறார்.