இனி தமிழ் படங்களில் தான் அதிகம்கவனம் செலுத்த போகிறேன் – அஜ்மல் அமீர்

திரு திரு துரு துரு ,அஞ்சாதே , கோ , உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அஜ்மல் அமீர் . தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் நடித்து வந்தாலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைப்பதற்குள் தெலுங்கு, மலையாளம் என்று பிசியாகிவிட்டார் .

தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்தவருக்கு அங்கேயும் நல்ல வரவேற்ப்பு கிடைத்திருக்கிறது , திரும்பவும் மலையாள படவுலகிற்கு போனவருக்கு மோகன் லாலுடன் சேர்ந்து ஒரு படத்தில் தமிழனாக நடித்திருக்கிறார் .

இப்படி முன்று மொழிகளிலும் நடித்து வருபவருக்கு தமிழ் படங்களில் நடிக்கவே அதிகம் ஆசைப்படுகிறாராம் . இதற்காகவே மலையாளம் , தெலுங்கு படங்களுக்கு கொஞ்ச நாள் ஓய்வு கொடுத்துவிட்டு முழுக்க முழுக்க தமிழ் படத்தில் கவனம் செலுத்தபோகிறாராம் . அதற்காகவே கேரளாவிலிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்து வந்து விட்டாராம் . நல்ல கதையம்சம் உள்ள படங்களுக்காக கதை கேட்டு வருகிறார் .

இனி தமிழில் ஒரு நல்ல இடத்தை பெரும் வரை தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தப்போகிறேன் என்றவர் இதற்காக ஒரு இந்தி பட வாய்ப்பை கூட வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் .