ஐங்கரனுக்கு கைமாறிய ‘தாரை தப்பட்டை’ ; சபதம் மறந்த சசிகுமார்..!

சட்டென்று உணர்ச்சிவசப்படுவதுதான் கலைஞர்களின் இயல்பு. அதுவும் இலங்கையில் தவிக்கும் தமிழர்களை பற்றி நினைத்தால் மேலும் உணர்ச்சி பிழம்பாகிவிடுவதும் அவர்கள்தான். அப்படித்தான் “இலங்கையில் தமிழ்ப்பட வசனங்களை நீக்குவதும் கட்டுப்பாடுகள் விதிப்பதும் கண்டிக்கத்தக்கது. அங்கு எனது படங்களை இனி திரையிட அனுப்ப மாட்டேன்” என தனது போராளி படம் வெளியான நேரத்தில் சபதம் செய்தார் சசிகுமார்.

இது நடந்து நான்கு வருடங்கள் ஓடிவிட்டன.. இப்போது பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘தாரை தப்பட்டை’ படம் ஐங்கரன் நிறுவனத்திற்கு கை மாறியுள்ளது. இலங்கையை சேர்ந்தவர்களான ஐங்கரன் நிறுவனத்தினர் நிச்சயமாக இந்தப்படத்தை இலங்கையிலும் வெளியிடுவார்கள்.

அப்போ, சசிகுமாரின் சபதம்..? ஒருவேளை தனது படங்கள் என்றால் தான் தயாரிக்கும் படங்கள் மட்டும் என்கிற அர்த்தத்தில் தான் சசிகுமார் சொல்லியிருப்பாரோ..? இந்தப்படத்தை பாலா தானே தயாரித்துள்ளார்.. அதனால் இது அந்த லிஸ்ட்டில் வராது போல.. நாம் தான் சசிகுமார் சொன்னதை தப்பாக புரிந்துகொண்டோமோ..?