இந்த நேரத்துல இவரு எதுக்குப்பா திரும்ப நடிக்க வர்றாரு..?

விசித்திரமானது தான் சினிமா உலகம்.. நடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பது உண்மைதான்.. ஆனால் இளம் நடிகரோ, கிழம் நடிகரோ தங்கள் நடிப்பை, தங்கள் முகத்தை திரையில் காண்பித்தால் ரசிகர்கள் அதை எவ்வளவு நேரத்திற்கு தாங்குவார்கள் என குத்துமதிப்பாக கணக்கு வைத்துக்கொள்ள வேண்டாமா..?

அப்படி கணக்கு வைத்துக்கொள்ளாமல் தான் முன்னாள் இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சி அவ்வப்போது சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டியவர், கடந்த வருடம் முழுநீள படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்தார்.. கொடுமைதான்.. சரி, ஒரு படத்துடன் தனது ஆசை நிறைவேறியது என ஒதுங்கிவிடுவார் என்றுதான் பலரும் நினைத்தார்கள்..

ஆனால் இப்போது திடீரென ‘நையப்புடை’ இன்னொரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்கிற அதிர்ச்சி அறிவிப்பு வெளியானது.. விஜய்யின் படத்தை தயாரிக்கும் தாணு தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறார். கோடிகளில் கணக்க்ப்போட்டு பிசினஸ் பண்ணும் தாணு, திடீரென இப்படி ஒரு பட அறிவிப்பை வெளியிட காரணம் என்ன..?

வேறென்ன..? துப்பாக்கி, தற்போது நடித்து வரும் ‘தெறி’ ஆகிய படங்களில் நடிக்க விஜய்யிடம் பேசி கால்ஷீட் வாங்கித்தந்து தாணுவுக்கு உதவியதில் எஸ்.ஏ.சியின் பங்கு நிறையவே இருக்கிறது. அதற்கு நன்றிக்கடனாகத்தான் எஸ்.ஏ.சி.யை வைத்து படம் தயாரிக்கிறாராம் தாணு.. இதில் இன்னொரு ஷாக் பாடலாசிரியர் பா.விஜய்யும் இந்தப்படத்தில் நடிக்கிறார் என்பதுதான்..

இரண்டுபேரும் சேர்ந்து ரசிகர்களை நையப்புடைக்காமல் இருந்தால் சரிதான்.