‘புலி’யை பிராண்டிய ஸ்ரீதேவி ; நொந்துபோன தயாரிப்பாளர்கள்..!

விஷயம் கேள்விப்பட்ட அனைவருமே இது ஓவர்.. ஓவரோ ஓவர் என்றுதான் சொல்கிறார்கள். புலி படத்தில் அந்த ராணி கேரக்டருக்கு ஸ்ரீதேவி கொஞ்சம் கூட செட்டாகவில்லை என்றும் படத்தில அவெர்ஷன் கேரக்டராக அவர் மாறியதால் படத்தை பார்க்க மனம் ஒப்பவில்லை என்றும் பல ரசிகர்கள் இணையத்தில் ஸ்ரீதேவி மீது அட்டாக் பண்ணிய கூத்தும் ரிலீசின்போது நடந்தது.

இப்போது ஸ்ரீதேவிக்கு இந்தப்படத்தில் நடிக்க மூன்று கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதையும், அது போதாது என ஸ்ரீதேவி தரப்பில் இருந்து இன்னும் ஐம்பது லட்ச ரூபாய் கேட்டு அடாவடி பண்ணுவதையும் பார்த்துதான் மேற்கூறிய ‘ஓவர்’ கமெண்டை பலரும் உதித்துள்ளார்கள்..

ஏற்கனவே தமிழில் புலி அடிவாங்கி தயாரிப்பளர்களை நட்டத்தில் தள்ளிய நிலையில் நொந்துபோய் இருக்கும் தயாரிப்பாளர்களை இந்தி, தெலுங்கில் டப் செய்தீர்களே, அதற்கும் சேர்த்து எனக்கு ஐம்பது லட்சம் அதிகமாக கொடுங்கள் என ஸ்ரீதேவி பிராண்டுவது எந்தவகையில் நியாயம் என கொந்தளிக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்..

இந்தப்படத்தின் ஷூட்டிங்கின்போது ஸ்ரீதேவி பண்ணிய பந்தாக்களையும் இழுத்து வைத்த செலவுகளையும் பற்றி ஒரு புத்தகமே வெளியிடலாம் என்றும் படக்குழுவினர் தரப்பில் சொல்லப்படுகிறது.. அப்படி இருக்கையில் படத்தின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்த ஸ்ரீதேவி இன்னும் கூடுதலாக பணம் கேட்டு டார்ச்சர் பண்ணுவது அந்த கலைமகள் சரஸ்வதிக்கே அடுக்காது என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்..

இனி சிறப்பு தோற்றம் என்கிற பெயரில் ரிட்டையர்டு ஆன கிழவிகளை அழைத்து வந்து இம்சிக்கும் சிம்புதேவன் போன்ற இயக்குனர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை பாடம்.