‘கவலை வேண்டாம்’ படக்குழுவினர் நம்மள கவலைப்பட வச்சுட்டாங்களே..!

ஒரு படம் வெளியாவதற்கு முன்பே நான்கு படங்களில் ஒப்பந்தமானால் எந்த ஒரு நடிகைக்கும் நிதானம் கண்ணை மறைக்கத்தான் செய்யும். ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள மலையாள நடிகை கீர்த்தி சுரேஷின் விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.

எல்ரெட் குமார் தயாரிப்பில் டீகே இயக்கும் ‘கவலை வேண்டாம்’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க முதலில் கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்வதாகத்தான் பேசிவந்தனர். ஆனால் இப்போது அவரை நீக்கிவிட்டு காஜல் அகர்வாலை ஹீரோயினாக்கிவிட்டனர்.

பல படங்களை கமிட் பண்ணிக்கொண்டு சரியான நேரத்திற்கு ஷூட்டிங் வராமல் கால்ஷீட் சொதப்ப ஆரம்பிக்கும் பட்டியலில் கீர்த்தி சுரேஷும் இணைந்துவிட்டார். காரணம் இப்போது மலையாள திரையுலகை சுத்தமாக புறக்கணித்துவிட்டு, தமிழைத்தாண்டி தெலுங்கிலும் வாய்ப்புகள் வருவதால் தப்பு வரும் பக்கம் பார்வையை திருப்ப ஆரம்பித்துவிட்டாராம் கீர்த்தி..

ஆரம்பமே இப்டி என்றால் இனி போகப்போக அடாவடி கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கும் என்பதால் எதற்கு வம்பை விலைகொடுத்து வாங்குவானேன் என கீர்த்தி சுரேஷை கழட்டிவிட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா..?