முன்னணி ஹீரோயின் கிடைக்காததால் தலைமறைவான மேட்டுக்குடி நடிகர்..!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நவரச நாயகன், தான் 20 வருடங்களுக்கு முன் நடித்த ‘அமரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போவதாக போஸ்டர் எல்லாம் அடித்து ஓட்டினார். ஆனால் இன்றுவரைக்கும் ஒருநாள் படப்பிடிப்பு கூட நடைபெறவில்லையாம். இத்தனைக்கும் இயக்குனர் ராஜேஷ்வர் முயற்சியில் தான் இந்தப்படம் ஆரம்பிக்கப்பட்டது.

அப்புறம் இதில் நடிப்பதற்கு நவரச நாயகனுக்கு என்ன சிக்கல் வந்தது என கேட்கிறீர்களா..? படத்தில் தனக்கு ஜோடியாக் எந்த ஹீரோயினை ஒப்பந்தம் பண்ணியிருக்கிறீர்கள் என கேட்டாராம். இயக்குனரும் தற்போது இருக்கும் இரண்டாம் நிலை நடிகைகளில் ஒருவர் பெயரை குறிப்பிட்டாராம்.

அவ்வளவுதான்.. பொங்கியெழுந்த நவரச நாயகன், “ஹே.. ஹே.. நான் இன்னும் யூத்தான ஹீரோ தானே.. அப்பா எனக்கு அந்த லெவலுக்கு ஜோடி தேடுங்க” என முன்னணி நடிகைகளில் மூன்று பேரை குறிப்பிட்டாராம்..

அதில் எந்த நடிகையின் வீட்டுக்கு போய், இந்த விஷயத்தை சொன்னாலும், அவர்கள் அங்கேயே அலறி மயக்கம் போட்டு விழுந்து விடும் அபாயம் உள்ளதால் இயக்குனர் தயங்குகிறார். அதனால் “ஹீரோயின் புக் பண்ணிவிட்டு அப்புறமா என் லைனுக்கு வாங்க” என எஸ்கேப் ஆகிவிட்டாராம் நவரச நாயகன்.