மண்ணின் வாசனை கூறும் வாசனை பாடல் 

தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று நம் நாசியை துளைத்திடும் வாசனைகள் பல உண்டு. மண்பானை வாசனை, பொங்கல் வாசனை, கரும்பு வாசனை, மஞ்சள் கிழங்கு வாசனை, ஜல்லிக்கட்டு வாசனை என சொல்லிகொண்டே போகலாம்.

ஜேம்ஸ் வசந்தன் இயக்கி இசையமைத்துள்ள வானவில் வாழ்க்கை திரைப்படத்தில் கவிஞர் யுகபாரதி எழுதியுள்ள வாசனை என்னும் பாடல்  தமிழர் மரபின், மண்ணின் வாசனைகளை எடுத்து கூறும் வரிகளை கொண்டுள்ளது.

” அறுவடை திருநாளாம் பொங்கல் அன்று கிராமங்களில்  வைக்கோல் வாசனை, வெல்லம் வாசனை, காளைமாட்டு கொம்பு வாசனை என தொன்மையான  பல வாசனைகள் வீசக்கூடும். அதை மையமாக கொண்டு தினசரி வாழ்வில் நாம் நுகரும் பல வாசனைகளை  பட்டியலிட்டிருக்கிறோம் இப்பாடலில் ” என்கிறார் கவிஞர் யுகபாரதி.

Song Link: