அனிருத்தும் ஆண்ட்ரியாவும் பின்னே எமி ஜாக்சனும்..!


பீப் சாங் விவகாரத்தில் சிக்கியுள்ள அனிருத் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதற்கு முன் ஒரு லாஜிக்கான கேள்வி.. பெண்கள் தங்களுக்கு பிடித்தவர்களுடன் கொஞ்சம் அந்தரங்கமாக, அதாவது சற்று ஏடாகூடமாக இருக்கும்போது அதை, அவர்களில் யாரோ ஒருவர் மொபைலில் படம் பிடிக்கிறார் என வைத்துக்கொள்வோம்.. நிச்சயமாக அதை எந்த பெண்ணாவது தானே வலிந்து இணையதளத்தில் லீக் அவுட் பண்ணுவார் என நினைக்கிறீர்களா..?

ஒருபோதும் செய்ய மாட்டார்கள். ஆனால் சிம்புவுக்கு அப்புறம் நம்ம அனிருத் இதே வேலையாகத்தான் இருக்கிறார் போல தெரிகிறது.. சிம்பு தனது முன்னாள் காதலிகளான நயன்தாரா, ஹன்ஷிகா ஆகியோருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவர்களுடனான காதல் முறிவுக்குப்பின்னர் பகிரங்கமாக இணையதளத்தில் உலவவிட்டார்..

அதேபோலத்தான் அனிருத், ஆண்ட்ரியாவின் முத்தக்காட்சி வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை உண்டுபண்ணியது. அதை வெளியிட்டதும் அனிருத் தான் என அப்போது சொல்லப்பட்டது.. இப்போது நடிகை எமி ஜாக்சனுடன் அனிருத் நெருக்கமாக இருக்கும் செல்பி ஒன்று வெளியாகி படு கலக்கு கலக்கி வருகிறது..

இதுவும் நிச்சயம் அய்யாவின் கைங்கர்யமாகத்தான் இருக்கும் என பேசிக்கொள்கிறார்கள்.. ஆமாம் யாரை உசுப்பேற்ற அனிருத் இப்படியெல்லாம் செய்து வருகிறார் என்பதுதான் புரியவில்லை.